முடிந்ததால் என்னை உள்ளே போடுங்கள் பார்க்கலாம்..! - நீதிமன்றத்தில் சேட்டை செய்த குடிமகனால் பரபரப்பு

கோவை போத்தனூரை சேர்ந்த அப்துல் நாசிர், திருட்டு வழக்கின் விசாரணைக்காக மதுக்கரை உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது "உங்களால் முடிந்ததால் என்னை உள்ளே போடுங்கள் பார்க்கலாம்" என்று சத்தம் போட்டு தகராறில் ஈடுபட்டதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் போத்தனுர் பாஜனை கோவில் வீதியை சேர்ந்த ஷேக் இப்ராகிம் என்பவரின் மகன் அப்துல் நாசிர்(வயது28).

திருட்டு வழக்கு குற்றவாளியான இவர், மதுக்கரை உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார். அப்போது நீதிமன்ற ஊழியர், குற்றவாளியான அப்துல் நசீரை நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்காக அவரின் பெயரை சொல்லி அழைத்துள்ளார்.

குடிபோதையில் நீதிமன்றதிற்கு வந்திருந்த அப்துல் நசீர், ஆத்திரத்துடன் "உங்களால் முடிந்ததால் என்னை உள்ளே போடுங்கள் பார்க்கலாம்" என்று சத்தம் போட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் நீதிமன்ற பணிகள் பாதித்தது. மதுக்கரை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தலைமை பொறுப்பு எழுத்தர் மனோகரன் இதுகுறித்து மதுக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் மதுக்கரை போலீசார் விரைந்து வந்து நீதிமன்ற ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட அப்துல் நசீரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வாய்தாவில் ஆஜராக வந்த திருட்டு வழக்கு குற்றவாளி ஒருவர் நீதிமன்ற ஊழியர்களிடம் குடிபோதையில் தகராறு செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...