கோவையில் செயல்பட்டுவரும் கல்குவாரிகளில் ஆய்வு - தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல்

கோவை மதுக்கரை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் கல்குவாரிகளில் நேரில் ஆய்வு செய்து, ஆய்வு அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கனிமவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையை அடுத்த மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி, கடந்த பிப்., 26ல், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கிணத்துக்கடவு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில், கனிமவளத்துறை உதவி இயக்குநர் சசிக்குமார் தலைமையிலான குழு, மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் அனுமதி பெற்ற அனுமதி பெறாத குவாரிகள் மற்றும் கிரஷர்கள் குறித்து ஆய்வு செய்தது. அதனடிப்படையில் அரசுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் தலா 100 குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உள்ளன. இதிலிருந்து வெளியேறும் துகள்கள் விவசாயத்திற்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், கிரஷர் மற்றும் குவாரிகளை சுற்றிலும் நைலான் மற்றும் கம்பி வலை அமைக்கவும், துணியாலான மாசுத்தடுப்பு சல்லடை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் இல்லாத கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களை இயக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். இந்த வலை மற்றும் துணியை பயன்படுத்தினால் விவசாய நிலங்களுக்கோ சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு ஏற்படாது, என்றனர்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...