சுவரொட்டிகளால் கலையிழக்கும் கிணத்துக்கடவு மேம்பால தூண்கள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுப்பதோடு, அழகிய ஓவியங்களை தூண்களில் தீட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் கடந்து செல்கின்றன. பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் இது இருந்து வருகிறது.

இந்நிலையில், இங்குள்ள மேம்பாலத்தின் தூண்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளபோதும், அதனை மீறி அதிக அளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவருகின்றன. அரசியல் கட்சியினர், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற சுவரொட்டிகளால் மேம்பாலத் தூண்கள் கலையிழந்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால் அவை அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன. இதைத் தடுக்க, வண்ண வண்ண ஓவியங்களை தூண்களில் தீட்ட வேண்டும். மேலும், தடையை மீறி தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...