சுவரொட்டிகளால் கலையிழக்கும் கிணத்துக்கடவு மேம்பால தூண்கள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுப்பதோடு, அழகிய ஓவியங்களை தூண்களில் தீட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் கடந்து செல்கின்றன. பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் இது இருந்து வருகிறது.

இந்நிலையில், இங்குள்ள மேம்பாலத்தின் தூண்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளபோதும், அதனை மீறி அதிக அளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவருகின்றன. அரசியல் கட்சியினர், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற சுவரொட்டிகளால் மேம்பாலத் தூண்கள் கலையிழந்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால் அவை அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன. இதைத் தடுக்க, வண்ண வண்ண ஓவியங்களை தூண்களில் தீட்ட வேண்டும். மேலும், தடையை மீறி தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...