வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை - தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த கோவை நீதிமன்றம்!

கோவையில் கடந்த 2021-ம் ஆண்டு 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அவரது வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ நீதிமன்றம், வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


கோவை: கோவையை சேர்ந்த பெண், தனது கணவரை விட்டு பிரிந்து, இரண்டாவது திருமணம் செய்தார். முதல் கணவருக்கு பிறந்த 13 வயதுடைய மகளுடன், இரண்டாவது கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2021 ல் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அவரது வளர்ப்பு தந்தை பாலியல் தொல்லை அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது தலைமை ஆசிரியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தலைமையாசிரியர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிறுமியின் வளர்ப்பு தந்தை மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...