உடுமலை நகராட்சியில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள வீட்டு மனை மீட்பு!

உடுமலை நகராட்சியில் பொதுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.5கோடி மதிப்பிலான மனைப்பிரிவை நகராட்சிக்கு ஒப்படைக்காமல் உரிமையாளர் தனியாருக்கு விற்பனை செய்ய முயன்ற நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளதாக, நகர்மன்ற தலைவர் முமத்தீன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை நகராட்சியில் ரூ.5 கோடி மதிப்புள்ள வீட்டுமனை மீட்கப்பட்டு உள்ளதாக நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட பழனி சாலை அருகே உள்ள துரைசாமி மனைப்பிரிவு, நகர் ஊரமைப்பு துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு. மனைப்பிரிவு மொத்த பரப்பளவில் பொதுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 24.00 சென்ட் நிலமானது ரிசர்வ் சைட் என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேற்கண்ட மனைப்பிரிவை உரிமையாளர் நகராட்சிக்கு ஒப்படைக்காமலும், இதனை விற்பனை செய்ய முயற்சி செய்ததை தொடர்ந்து நகராட்சியால் ரிசர்வ் சைட் இடத்தினை மீட்டு பொதுமக்கள் அறியும் வண்ணம் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட இடத்தின் மொத்த பரப்பளவு 24.00 சென்ட் ஆகும். இதன் மதிப்பு சுமார் ரூபாய் 5 கோடி ஆகும். இந்த மனை பிரிவு மீட்கப்பட்டு உள்ளதாக நகர்மன்றத் தலைவர் முமத்தீன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...