உடுமலை நகராட்சியில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள வீட்டு மனை மீட்பு!

உடுமலை நகராட்சியில் பொதுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.5கோடி மதிப்பிலான மனைப்பிரிவை நகராட்சிக்கு ஒப்படைக்காமல் உரிமையாளர் தனியாருக்கு விற்பனை செய்ய முயன்ற நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளதாக, நகர்மன்ற தலைவர் முமத்தீன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை நகராட்சியில் ரூ.5 கோடி மதிப்புள்ள வீட்டுமனை மீட்கப்பட்டு உள்ளதாக நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட பழனி சாலை அருகே உள்ள துரைசாமி மனைப்பிரிவு, நகர் ஊரமைப்பு துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு. மனைப்பிரிவு மொத்த பரப்பளவில் பொதுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 24.00 சென்ட் நிலமானது ரிசர்வ் சைட் என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேற்கண்ட மனைப்பிரிவை உரிமையாளர் நகராட்சிக்கு ஒப்படைக்காமலும், இதனை விற்பனை செய்ய முயற்சி செய்ததை தொடர்ந்து நகராட்சியால் ரிசர்வ் சைட் இடத்தினை மீட்டு பொதுமக்கள் அறியும் வண்ணம் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட இடத்தின் மொத்த பரப்பளவு 24.00 சென்ட் ஆகும். இதன் மதிப்பு சுமார் ரூபாய் 5 கோடி ஆகும். இந்த மனை பிரிவு மீட்கப்பட்டு உள்ளதாக நகர்மன்றத் தலைவர் முமத்தீன் தெரிவித்தார்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...