கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்த மயில்கள் - வனத்துறை விசாரிக்க கோரிக்கை

கோவை டாடாபாத் பகுதியில் இரண்டு மயில்கள் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தும் விசாரணை நடத்தவில்லை என்றும், மயில்கள் கடந்த சில நாட்களாக சமூக விரோதிகளால் வேட்டையாடப்படும் நிலையில், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் அருகே மயில்கள் இறந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் இரண்டு மயில்கள் இறந்து கிடந்துள்ளன. அதில் ஒரு மயிலை நாய்கள் தூக்கிச் சென்றிருக்கின்றன. இந்நிலையில் மயில்கள் இறப்பு குறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இறந்த மயில்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு மருந்துக்காகவும், இறைச்சிக்காகவும் சமூக விரோதிகளால் மயில்கள் வேட்டையாடப்பட்ட சம்பவமும் கோவையில் அரங்கேறி உள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...