பொள்ளாச்சி அருகே தோட்டத்தில் புகுந்த 6 அடி நீள மலைப்பாம்பு - பத்திரமாக மீட்ட வனத்துறை!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே புளியங்கண்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கியிருந்த 6 அடி நீள மலைப்பாம்பை, வேட்டை தடுப்பு காவலர் சக்திவேல் லாவகமாக பிடித்தார். பின்னர் பாம்பு, ஆழியார் அருகே உள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த புளியங்கண்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் வேலை செய்த பகுதியில் மலைப்பாம்பு பதுங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



இது குறித்து தோட்டத்து உரிமையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தோட்டத்து உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.



பின்னர் அங்கு விரைந்து வந்த வனத்துறை வேட்டை தடுப்பு காவலர் சக்திவேல் என்பவர் சுமார் ஆறு அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்தார்.

இதையடுத்து, அந்த மலைபாம்பு ஆழியார் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...