கோவை கார் பார்க்கிங்கில் தூங்கிய போதை ஆசாமிகள் - தர்ம அடி கொடுத்து விரட்டியதால் பரபரப்பு!

மது குடித்து விட்டு கார் பார்க்கிங்கில் தூங்கிக் கொண்டிருந்த கோவை கணபதியை சேர்ந்த கார்த்திக்கேயன், ஸ்டீபன் இருவரையும், மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்கினர். காயடைந்த கார்த்திக்கேயன், ஸ்டீபன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


கோவை: கோவை உடையாம்பாளையம் கணபதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பர் ஸ்டீபன் என்பவரும் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மதுபான கடையில் மது வாங்கி அங்குள்ள பாரில் மது குடித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவரும் ராம் நகரில் உள்ள மார்க்கெட் சாலை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங்கில் படுத்துத் தூங்கியுள்ளனர். அப்போது அங்கு சென்ற இரண்டு மர்ம நபர்கள், குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்த இருவரையும் எழுப்பி அடித்துள்ளனர்.

மேலும், கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் இருவரையும் அடித்து விரட்ட அந்த மர்ம நபர்கள் முயற்சித்துள்ளனர். இந்த நிலையில், குடிபோதையில் இருந்த இருவரும் வலி தாங்க முடியாமல் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரும் முன்பே, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

காயம்பட்ட இருவரும் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதால், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மதுபோதையில் தூங்கிய இருவரை, எழுப்பி தர்ம அடி கொடுத்தவிவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...