கோவை வெள்ளியங்கிரி மலையேறிய சென்னை தனியார் நிறுவன மேலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!

கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறிய சென்னை தனியார் நிறுவன மேலாளரான கதிரவன் என்பவர், தனது நண்பர்களுடன் 4வது மலைக்கு வந்த போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறிய சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி வடக்கு பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (43). இவர் சென்னை புவி டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கோவை வந்த கதிரவன் வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் தனது நண்பர்கள் 16 பேருடன் கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையில் ஏறியுள்ளார். பின்னர் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து விட்டு, இன்று கீழே இறங்கியுள்ளனர்.



அப்போது கதிரவன் குழுவினர் 4 ஆவது மலைக்கு வந்த போது, இரவு 8 மணியளவில் திடீரென கதிரவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து உடன் வந்த நண்பர்கள் அவருக்கு முதலுதவி அளித்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கிருந்த வனத்துறையினர் உதவியுடன் கதிரவன் உடல் கீழே கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...