சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் பாலம் அமைக்க பூமி பூஜை - நகர்மன்ற தலைவர் பங்கேற்பு

வால்பாறை நகராட்சிக்குட்பட்ட சோலையாறு அணை குடியிருப்பு பகுதிக்கு மழைக்காலங்களில் பொதுமக்கள் செல்ல நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.9.90 லட்சம் செலவில் பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையில் நகர்மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி கலந்து கொண்டு பூஜையைத் தொடங்கி வைத்தார்.


கோவை: சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் மக்கள் நடந்து செல்ல பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் மழைக்காலங்களில் பாதையைக் கடக்க சிரமமாக உள்ளதாகவும், பாலம் அமைத்து தரக்கோரியும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.



பொதுமக்களின் கோரிக்கை ஏற்ற நகராட்சி நிர்வாகம் பாலம் அமைத்துத் தர உறுதியளித்தது. அதனடிப்படையில், ரூ.9.90 லட்சம் செலவில் அந்தப் பகுதியில் பாலம் அமைக்கவும், இதேபோல் நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செல்லும் பாதையைச் சீரமைக்கவும், அப்பள்ளி மாணவர்கள் நலன் கருதித் தடுப்பு சுவர் கட்டுவதற்கும் பூமி பூஜை நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் அழகுசுந்தர வள்ளி மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், இந்துமதி, ஜெயந்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...