சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் பாலம் அமைக்க பூமி பூஜை - நகர்மன்ற தலைவர் பங்கேற்பு

வால்பாறை நகராட்சிக்குட்பட்ட சோலையாறு அணை குடியிருப்பு பகுதிக்கு மழைக்காலங்களில் பொதுமக்கள் செல்ல நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.9.90 லட்சம் செலவில் பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையில் நகர்மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி கலந்து கொண்டு பூஜையைத் தொடங்கி வைத்தார்.


கோவை: சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் மக்கள் நடந்து செல்ல பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் மழைக்காலங்களில் பாதையைக் கடக்க சிரமமாக உள்ளதாகவும், பாலம் அமைத்து தரக்கோரியும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.



பொதுமக்களின் கோரிக்கை ஏற்ற நகராட்சி நிர்வாகம் பாலம் அமைத்துத் தர உறுதியளித்தது. அதனடிப்படையில், ரூ.9.90 லட்சம் செலவில் அந்தப் பகுதியில் பாலம் அமைக்கவும், இதேபோல் நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செல்லும் பாதையைச் சீரமைக்கவும், அப்பள்ளி மாணவர்கள் நலன் கருதித் தடுப்பு சுவர் கட்டுவதற்கும் பூமி பூஜை நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் அழகுசுந்தர வள்ளி மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், இந்துமதி, ஜெயந்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...