கோவையில் மறைந்த பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி!

பிரபல புகைப்பட கலைஞரும், வாட் எ கர்வாட் என்ற உணவு நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டாலின் ஜேக்கப் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


கோவை: மறைந்த பிரபல புகைப்பட கலைஞரான ஸ்டாலின் ஜேக்கப் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இணையத்தில் பிரபலமான What A Karward என்ற உணவு நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரபல புகைப்பட கலைஞருமான ஸ்டாலின் ஜேக்கப் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் நேற்று சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடலானது கோவை கடைவீதி பகுதியில் உள்ள அவரது சொந்த இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.



இந்நிலையில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜேக்கப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட திமுக நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...