கோவையில் ஆட்டோ ஓட்டுநரிடம் வழிபறியில் ஈடுபட்ட இருவர் கைது!

கோவை கணபதி பகுதியில் சாலையோரம் ஆட்டோவை நிறுத்தி விட்டு அமர்ந்திருந்த ஓட்டுநர் நடராஜ்(47) என்பவரின் பாக்கெட்டில் இருந்த பணத்தைப் பறித்துச் சென்ற இருவரையும் கைது செய்தனர்.


கோவை: கணபதி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அண்ணாநகர் குட்டை கணபதி பகுதியில் வசிப்பவர் நடராஜ் (47). ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது ஆட்டோவை கணபதி அருகே உள்ள சிக்கன் கடை முன்பு ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு அமர்ந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த குணசேகரன்(30) மற்றும் நடராஜ் (37) ஆகிய இருவரும் நடராஜன் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். நடராஜ் பணம் தர மறுத்ததால், இருவரும் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநர் நடராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.800யை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து நடராஜ் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...