கோவையில் ஆட்டோ ஓட்டுநரிடம் வழிபறியில் ஈடுபட்ட இருவர் கைது!

கோவை கணபதி பகுதியில் சாலையோரம் ஆட்டோவை நிறுத்தி விட்டு அமர்ந்திருந்த ஓட்டுநர் நடராஜ்(47) என்பவரின் பாக்கெட்டில் இருந்த பணத்தைப் பறித்துச் சென்ற இருவரையும் கைது செய்தனர்.


கோவை: கணபதி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அண்ணாநகர் குட்டை கணபதி பகுதியில் வசிப்பவர் நடராஜ் (47). ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது ஆட்டோவை கணபதி அருகே உள்ள சிக்கன் கடை முன்பு ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு அமர்ந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த குணசேகரன்(30) மற்றும் நடராஜ் (37) ஆகிய இருவரும் நடராஜன் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். நடராஜ் பணம் தர மறுத்ததால், இருவரும் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநர் நடராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.800யை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து நடராஜ் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...