கோவையில் பிரபல கஞ்சா வியாபாரி கைது - போலீசார் அதிரடி

கோவை கெம்பட்டி காலனி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் என்ற இளைஞரை கைது செய்த பெரியகடைவீதி போலீசார், அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கெம்பட்டி காலனி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், தனிப்படை போலீசார் அவ்வப்போது ரோந்து சென்று கஞ்சா, போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவற்றை விற்கும் கும்பல் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை பெரியகடைவீதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள கீரை தோட்டம் பகுதியில் போலீசார் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் பெயர் கார்த்திக் என்பதும், அவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.



இந்நிலையில் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பொட்டலம், ஒரு செல்போனையும் பறிமுதல் செய்த போலீசார், கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...