கோவையில் பிரபல கஞ்சா வியாபாரி கைது - போலீசார் அதிரடி

கோவை கெம்பட்டி காலனி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் என்ற இளைஞரை கைது செய்த பெரியகடைவீதி போலீசார், அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கெம்பட்டி காலனி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், தனிப்படை போலீசார் அவ்வப்போது ரோந்து சென்று கஞ்சா, போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவற்றை விற்கும் கும்பல் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை பெரியகடைவீதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள கீரை தோட்டம் பகுதியில் போலீசார் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் பெயர் கார்த்திக் என்பதும், அவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.



இந்நிலையில் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பொட்டலம், ஒரு செல்போனையும் பறிமுதல் செய்த போலீசார், கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...