ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் ரூ.19 லட்சம் மோசடி - கோவை சைபர் கிரைமில் பெண் புகார்!

கோவை மணியகாரம்பாளையத்தை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் அமேசான் தளத்தில் 19 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்ததாக சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். வீட்டிலிருந்து வேலை, டேட்டா என்ட்ரி, ஆன்லைன் முதலீடு என்று விதவிதமாக சைபர் கிரைம்களுக்கு பொதுமக்கள் இரையாக கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.


கோவை: கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது40). இவர் இணையதளத்தில் முதலீடு செய்வதற்காக வர்த்தக ரீதியான முன்னணி இ-காமர்ஸ் இணையத்தில் தேடியுள்ளார். அப்பொழுது ஒரு வாட்ஸ்-அப் நம்பரை பார்த்த கலைச்செல்வி, அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தார். அவர்கள் அமேசான் தளத்தில் முதலீடு செய்தால் அதிகளவிலான லாபம் கிடைக்கும் என்று வழிகாட்டியுள்ளனர்.

அவர்கள் www.amazon5551.com என்ற URL வெப்சைட்டை வாட்ஸ்-அப் மற்றும் டெலிகிராம் மூலமாக அனுப்பி இருக்கின்றனர். இதை நம்பிய கலைச்செல்வி தனது 3 வங்கி கணக்கிலிருந்து 19 லட்சத்து 2 ஆயிரத்து 993 பணத்தை முதலீடாக செய்துள்ளார். ஆனால், முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முடியாமல் தவித்துள்ளார்.

இதுகுறித்து தனக்கு இணையத்தில் வழிகாட்டியவரிடம் அழைத்து கேட்டபொழுது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கலைச்செல்வி, சிட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், குற்றவாளிகளை வலைவீசித் தேடிவருகின்றனர்.

கலைச்செல்வியின் வங்கி பரிவர்த்தனை விவரங்களை கைப்பற்றியுள்ள சைபர் கிரிமினல்களின் வங்கி கணக்குகளை முடக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். வீட்டிலிருந்து வேலை, டேட்டா என்ட்ரி, ஆன்லைன் முதலீடு என்று விதவிதமாக சைபர் கிரைம்களுக்கு பொதுமக்கள் இரையாக கூடாது என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...