கோவை பேருந்தில் மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு - மர்ம நபருக்கு போலீஸ் வலை

கோவை வடவள்ளியை சேர்ந்த மூதாட்டி சாந்தகுமாரி, உக்கடத்திற்கு பேருந்தில் செல்லும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் நகையை திருடிச் சென்ற நபரை உக்கடம் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தகுமாரி (வயது62). இவர் டவுன்ஹால் பகுதிக்கு தனிப்பட்ட வேலையாக சென்றார்.

வேலையை முடித்துவிட்டு வடவள்ளி செல்வதற்காக டவுன்ஹாலில் இருந்து உக்கடத்திற்கு ரூட் நெம்பர் 33 பேருந்தில் அவர் ஏறி பயணித்துள்ளார்.

பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில், மூதாட்டி உக்கடம் பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.

அப்பொழுது தன் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க சங்கிலி மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர், பேருந்து நிலையம் அருகே உள்ள உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் வடவள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...