கோவையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை - பெரிய நகைகளை விட்டு சிறிய நகைகளை மட்டுமே திருட்டு!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சண்முகசுந்தரம் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 13 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் வசித்துவருபவர்சண்முகசுந்தரம் (வயது64). ஓய்வு பெற்ற TNEB ஊழியரான இவர், தனது மனைவியின் நகைகளை பீரோவில் பூட்டி வைத்துவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். வீடு திரும்பிவந்து பார்த்தபொழுது, பீரோவில் இருந்த நகைகளில் ஒரு சில நகைகள் காணாமல் போயிருந்தன.

ஆரம் போன்ற பெரிய நகைகள் பத்திரமாக இருந்த நிலையில், 7 சவரன் தங்க சங்கிலி, 4 சவரன் வளையல், 1 சவரன் மோதிரம், முக்கால் சவரன் தோடு என சுமார் 13சவரன் நகைகள் மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில்வழக்கு பதிவு செய்த போலீசார், முதியவரின் வீட்டிற்கு நேரில் சென்று, அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் உள்ள நகைகளில் பெரிய நகைகளை விட்டுவிட்டு சிறிய நகைகளை மட்டுமே கொள்ளையடித்தவர்கள் யார்? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்படி வித்தியாசமாக திருடியிருப்பது ஏன் என்ற குழப்பத்துடன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...