கோவையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை - பெரிய நகைகளை விட்டு சிறிய நகைகளை மட்டுமே திருட்டு!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சண்முகசுந்தரம் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 13 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் வசித்துவருபவர்சண்முகசுந்தரம் (வயது64). ஓய்வு பெற்ற TNEB ஊழியரான இவர், தனது மனைவியின் நகைகளை பீரோவில் பூட்டி வைத்துவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். வீடு திரும்பிவந்து பார்த்தபொழுது, பீரோவில் இருந்த நகைகளில் ஒரு சில நகைகள் காணாமல் போயிருந்தன.

ஆரம் போன்ற பெரிய நகைகள் பத்திரமாக இருந்த நிலையில், 7 சவரன் தங்க சங்கிலி, 4 சவரன் வளையல், 1 சவரன் மோதிரம், முக்கால் சவரன் தோடு என சுமார் 13சவரன் நகைகள் மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில்வழக்கு பதிவு செய்த போலீசார், முதியவரின் வீட்டிற்கு நேரில் சென்று, அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் உள்ள நகைகளில் பெரிய நகைகளை விட்டுவிட்டு சிறிய நகைகளை மட்டுமே கொள்ளையடித்தவர்கள் யார்? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்படி வித்தியாசமாக திருடியிருப்பது ஏன் என்ற குழப்பத்துடன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...