அமராவதி அணையில் இருந்து மார்ச் 31வரை தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை!

உடுமலையில் உள்ள அமராவதி அணையில் இருந்து மார்ச்.2 முதல் வரும் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, 453.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசன வசதிக்காக மார்ச்.2 முதல் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் உள்ள 8 பழைய ராஜ வாய்க்கால் பாசன பகுதிகளில் கதிர் நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு அமராவதி அணையிலிருந்து அமராவதி ஆற்று மதகு வழியாக விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க காலநீட்டிப்பு செய்யப்படுகிறது.



மொத்தம் 31 நாட்களில் 21 நாட்கள் தண்ணீர் திறப்பு, 10 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில் மொத்தம் 453.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...