ரூ.1200 கோடி செலவழித்தும் ஏன் ரயில்கள் இயக்கவில்லை..? - பொள்ளாச்சி எம்.பி கேள்வி

தெற்கு ரயில்வே சார்பில் பாலக்காட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவையிலிருந்து பழனி வழியாகத் தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க 1,200 கோடி ரூபாய் செலவழித்தும் ஏன் இன்னும் ரயில்கள் இயக்கவில்லை எனக் பொள்ளாச்சி எம்.பி.,சண்முக சுந்தரம் கேள்வி எழுப்பினார்.


கோவை: பாலக்காட்டில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துகடவு முதல் பொள்ளாச்சிக்குட்பட்ட 24 கி.மீட்டர் தூரம் வரையிலான ரயில்வே பகுதிகள் பாலக்காடு கோட்டத்திற்கு உட்பட்டது. இந்த கோட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி எம்.பி சண்முக சுந்தரம், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளர் நீனு இட்டியேரா, டிஆர்எம் உட்படப் பல ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பொள்ளாச்சி எம்.பி சண்முக சுந்தரம், கோவையிலிருந்து பழனி வழியாகத் தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க 1,200 கோடி ரூபாய் செலவழித்தும் ஏன் இதுவரை ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...