சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு கோரிய திமுகவின் கோரிக்கையில் எவ்வித நியாயம் இல்லை, கோவையில் வைகோ கருத்து.


சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு கோரிய திமுகவின் கோரிக்கையில் எவ்வித நியாயம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அரசியல் சூழல் குறித்து தாம் எந்தவிதமான கருத்துக்களையும் கூறவில்லை எனவும் இன்று சட்டமன்றத்தில் திமுக ரகசிய வாக்கெடுப்பு நடத்த விடுத்த கோரிக்கை நியாயம் இல்லை எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இன்று கடைபிடிக்கப்பட்ட நடைமுறைதான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருவதாக கூறிய அவர் ரகசிய வாக்கெடுப்பு என்பதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவிதமான சலுகையும் வழங்கப்படவில்லை எனவும் அவர் அப்போது தெரிவித்தார். எனவே இந்த கோரிக்கைகளை முன்வைத்து திமுக சட்டமன்றத்தில் நடத்திய விவாதங்களும், அமளிகளும் தேவையில்லாத ஒன்று எனவும் வைகோ அப்போது குறிப்பிட்டார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...