கோவையில் காதல் விவகாரத்தில் தந்தை, மகன் மீது தாக்குதல் - 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் அவரது தந்தை ராஜசேகர் மீது இரும்பு கம்பி, சுத்தியல் மூலம் தாக்குதல் நடத்திய விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் பீளமேடு அருகே காதல் விவகாரத்தில் தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் உள்பட மூவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பீளமேடு அடுத்த அண்ணா நகர் ஆறுமுகம் லேஅவுட் பகுதியில் வசிப்பவர் ராஜசேகர். இவர் அதே பகுதியில் மெஸ் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவரது மகன் ஹரிஹரன் (22), அவரது தந்தையின் ஓட்டலிலேயே வேலை செய்து வருகிறார். இதனிடையே இவர், ஆவராம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அதே பெண்ணை விக்னேஷ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் விக்கி என்ற விக்னேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் ஹரிஹரன் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார்.

அப்போது ஹரிஹரனை சுத்தியலால் தாக்கிய அந்த கும்பல், அவரது தந்தை ராஜசேகரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் தந்தை, மகன் இருவரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து வீட்டிலிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு, 3 பேரும் தப்பிச்சென்றுள்ளனர்.

படுகாயம் அடைந்த ஹரிஹரன், அவரது தந்தை ராஜசேகர் ஆகியோர் அவர்களது உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காயமடைந்த ஹரிஹரன் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் விக்கி என்ற விக்னேஷ் உட்பட 3 பேர் மீது கொலை முயற்சி, தாக்குதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...