ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்கு ஸ்டாலின்தான் காரணம்..! - ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்காக திமுக அமைச்சர்களின் உழைப்பு என்பது சாதாரண உழைப்பு கிடையாது. அவர்கள் தேர்தலை சந்தித்தபோதுகூட இந்த அளவுக்கு உழைத்திருப்பார்களா? என்ற சந்தேகம் இருக்கிறது என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


கோவை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. தபால் ஓட்டு முதல் அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணி வகித்துவருகிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசியதாவது:

தேர்தல் காலத்தில் கொடுத்த 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் மக்கள் இந்த வெற்றியை தந்துள்ளார்கள். ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. மறைந்த எனது மகன் திருமகன் ஈவேரா விட்டுச்சென்ற பணிகளை தொடர்வேன். இங்கு அமைச்சர் முத்துசாமியோடு சேர்ந்து தமிழக முதல்வரை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்.

ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கு பெருமையாக இருக்கிறது. ஸ்டாலின் என்னைவிட வயதில் சிறியாதவராக இருந்தாலும் அனுபவத்தில் பல மடங்கு மூத்தவர். அவர் மூலம் இந்த ஊர் மக்களுக்கு பல நல்ல காரியங்கள் செய்வேன். வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

திமுக அமைச்சர்களின் உழைப்பு என்பது சாதாரண உழைப்பு கிடையாது. அவர்கள் தேர்தலை சந்தித்தபோதுகூட இந்த அளவுக்கு உழைத்திருப்பார்களா? என்ற சந்தேகம் இருக்கிறது. தேர்தல் பணியாற்றிய அமைச்சர் பெருமக்களுக்கு நன்றி. கமலஹாசன், கனிமொழி போன்ற தலைவர்களின் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் திரண்டனர்.

கடுமையான வேலையும் பொருட்படுத்தாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் இங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த இடைத்தேர்தல் வெற்றி, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். எனக்கு வாக்களித்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...