கோவை அருகே காட்டுயானை தாக்கி இளைஞர் பலி - சிறுநீர் கழிக்க வெளியே சென்றபோது சோகம்!

கோவை மாங்கரை பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் என்பவர், தனியார் மருந்து நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வந்தார். இவர் வீட்டின் அருகில் இரவில் சிறுநீர் கழிக்க வெளியே சென்றபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தடாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்குள் வருவது வழக்கம். கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை மற்றும் கூட்டமாக வரும் காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும் மனிதர்களை தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு மாங்கரை பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை ஒன்று, அங்கு குடியிருக்கும் மகேஷ்குமார் என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்தபோது தாக்கியுள்ளது. மகேஷ்குமாரின் சத்தம் கேட்டு அவரது மனைவி திவ்யா மற்றும் அவரது தந்தை பெருமாள் சாமி ஆகியோர் வெளியே வந்து பார்த்த போது வீட்டருகே காட்டு யானை மகேஷ்குமாரை தாக்கிவிட்டு அங்கேயே நின்றிருந்தது.



சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து சென்றவுடன் மகேஷ்குமாரின் அருகில் சென்று பார்த்தபோது, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருந்து கம்பெனியில் சேல்ஸ் மேனாக பணியாற்றிவந்தார்.

இது குறித்து, தடாகம் காவல் துறையினருக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மகேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...