கோவை அருகே காட்டுயானை தாக்கி இளைஞர் பலி - சிறுநீர் கழிக்க வெளியே சென்றபோது சோகம்!

கோவை மாங்கரை பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் என்பவர், தனியார் மருந்து நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வந்தார். இவர் வீட்டின் அருகில் இரவில் சிறுநீர் கழிக்க வெளியே சென்றபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தடாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்குள் வருவது வழக்கம். கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை மற்றும் கூட்டமாக வரும் காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும் மனிதர்களை தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு மாங்கரை பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை ஒன்று, அங்கு குடியிருக்கும் மகேஷ்குமார் என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்தபோது தாக்கியுள்ளது. மகேஷ்குமாரின் சத்தம் கேட்டு அவரது மனைவி திவ்யா மற்றும் அவரது தந்தை பெருமாள் சாமி ஆகியோர் வெளியே வந்து பார்த்த போது வீட்டருகே காட்டு யானை மகேஷ்குமாரை தாக்கிவிட்டு அங்கேயே நின்றிருந்தது.



சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து சென்றவுடன் மகேஷ்குமாரின் அருகில் சென்று பார்த்தபோது, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருந்து கம்பெனியில் சேல்ஸ் மேனாக பணியாற்றிவந்தார்.

இது குறித்து, தடாகம் காவல் துறையினருக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மகேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...