கோவை வெள்ளியங்கிரி மலையில் நெல்லை தொழிலாளி மயங்கி விழுந்து பலி

கோவை வெள்ளிங்கிரி மலை ஏறிய திருநெல்வேலியை சேர்ந்த தொழிலாளி முருகன் என்பவர், இரண்டாவது வழுக்கல் மலைக்கு சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையை சேர்ந்தவர் முருகன் (வயது60). இவருக்குதிருமணம் ஆகி குழந்தைகள் இல்லாமல், மனைவியைப் பிரிந்து கடந்த 30 வருடங்களாக அண்ணன் மகள் மகாலட்சுமி என்பவரது பொறுப்பில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அவரது ஊரை சேர்ந்த நண்பர்கள் 10 பேருடன் கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்காக வந்துள்ளார். இரண்டாவது வருடமாக வெள்ளிங்கிரி மலை ஏறும் முருகன், இன்று அதிகாலை மலையேற தொடங்கினார்.முதல் மலையை, கடந்து இரண்டாவது வழுக்கல் மலைக்கு சென்றபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அங்கு அவருடன் இருந்தவர்கள் சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. வனத்துறையினர் உதவியுடன் இறந்த முருகனின் உடல் கீழே கொண்டுவரப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு முருகன் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தசம்பவம் தொடர்பாக ஆலந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...