கோவை வெள்ளியங்கிரி மலையில் நெல்லை தொழிலாளி மயங்கி விழுந்து பலி

கோவை வெள்ளிங்கிரி மலை ஏறிய திருநெல்வேலியை சேர்ந்த தொழிலாளி முருகன் என்பவர், இரண்டாவது வழுக்கல் மலைக்கு சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையை சேர்ந்தவர் முருகன் (வயது60). இவருக்குதிருமணம் ஆகி குழந்தைகள் இல்லாமல், மனைவியைப் பிரிந்து கடந்த 30 வருடங்களாக அண்ணன் மகள் மகாலட்சுமி என்பவரது பொறுப்பில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அவரது ஊரை சேர்ந்த நண்பர்கள் 10 பேருடன் கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்காக வந்துள்ளார். இரண்டாவது வருடமாக வெள்ளிங்கிரி மலை ஏறும் முருகன், இன்று அதிகாலை மலையேற தொடங்கினார்.முதல் மலையை, கடந்து இரண்டாவது வழுக்கல் மலைக்கு சென்றபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அங்கு அவருடன் இருந்தவர்கள் சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. வனத்துறையினர் உதவியுடன் இறந்த முருகனின் உடல் கீழே கொண்டுவரப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு முருகன் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தசம்பவம் தொடர்பாக ஆலந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...