கோவை வெள்ளியங்கிரி மலையில் நெல்லை தொழிலாளி மயங்கி விழுந்து பலி

கோவை வெள்ளிங்கிரி மலை ஏறிய திருநெல்வேலியை சேர்ந்த தொழிலாளி முருகன் என்பவர், இரண்டாவது வழுக்கல் மலைக்கு சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையை சேர்ந்தவர் முருகன் (வயது60). இவருக்குதிருமணம் ஆகி குழந்தைகள் இல்லாமல், மனைவியைப் பிரிந்து கடந்த 30 வருடங்களாக அண்ணன் மகள் மகாலட்சுமி என்பவரது பொறுப்பில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அவரது ஊரை சேர்ந்த நண்பர்கள் 10 பேருடன் கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்காக வந்துள்ளார். இரண்டாவது வருடமாக வெள்ளிங்கிரி மலை ஏறும் முருகன், இன்று அதிகாலை மலையேற தொடங்கினார்.முதல் மலையை, கடந்து இரண்டாவது வழுக்கல் மலைக்கு சென்றபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அங்கு அவருடன் இருந்தவர்கள் சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. வனத்துறையினர் உதவியுடன் இறந்த முருகனின் உடல் கீழே கொண்டுவரப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு முருகன் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தசம்பவம் தொடர்பாக ஆலந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...