எதிர்கட்சியின் கோரிக்கையை சபாநாயகர் பரீசிலனை செய்யாதது சட்டவிரோதம் -புதிய தமிழகம் கட்சித்தலைவர் குற்றச்சாட்டு

நீதிமன்றத்தால் தண்டிக்கபட்ட ஒருவர் முன் மொழிந்தவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்து முதல்வராக தேர்வு செய்து இருப்பது மக்கள் மன நிலையை ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது பொருள் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சட்டமன்றத்தில் ரகசியவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற எதிர்கட்சியினரின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் பரீசிலனை செய்யாதது சட்டவிரோதம் மட்டுமல்ல ஜனநாயக விரோதமமும் கூட என குற்றம்சாட்டினார். மேலும் கடந்த 12 தினங்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் வாக்கெடுப்பு நடந்திருப்பது சரியானதல்ல எனவும், அவர்களை தொகுதி மக்களை சந்தித்து கருத்தறிந்த பின் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இருக்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர், சட்டமன்றத்தில் சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு கோரிக்கையை நிராகரித்து இருக்கன்றார் எனவும் கடந்த காலங்களிலும் சபாநாயகர் இதே போல செயல் பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், ரகசிய வாக்கெடுப்பை சபாநாயகர்  நிராகரிக்க என்ன காரணம் எனவும் கேள்வி எழுப்பினார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை காட்டி இருந்தாலும் தார்மீக ரீதியாக இது செல்லாது எனவும் இதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் தெரிவித்த அவர் 122 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் அமையும் இந்த ஆட்சி தொடர்வதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார். தண்டிக்கபட்ட ஒருவரால் முன் மொழியப்பட்ட ஒருவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்து இருப்பது மக்கள் மன நிலையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது பொருள் எனவும் தெரிவித்தார். 

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...