கோவை அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து கால்நடைகளை திருட முயன்ற கும்பல் - ஒருவர் கைது

கோவை மதுக்கரை அரிசிபாளையம் அருகே ராமலிங்கம் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, கோழிகளை திருட முயன்ற கார்த்திக் என்பவரை மதுக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சரவணன், ரமேஷ் என இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை அரிசிபாளையம், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த ராமலிங்கம் (வயது55) அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு இவர் வழக்கம்போல பணிகளை முடித்து விட்டு தூங்கச் சென்றார்.

அப்போது, நள்ளிரவு மூன்று மணியளவில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, தோட்டத்திற்குள் புகுந்த மூன்று மர்ம நபர்கள் அங்கிருந்த ஆடு மற்றும் கோழிகளை திருட முயன்றதாக தெரிகிறது.

இதையடுத்து ராமலிங்கம் சத்தம் போட்டதால் அங்கிருந்த சக விவசாயிகள், பொதுமக்கள் சுற்றி வலைத்து மூன்று பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால், ஒருவர் மட்டுமே சிக்கினார்.



இதையடுத்து அவரை மதுக்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர்கள் நெகமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது28), என்பதும் அவருடன் குனியமுத்தூரை சேர்ந்த சரவணன் (வயது27) மற்றும் அறிவொளிநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது22) ஆகியார் வந்ததும் தெரியவந்தது.

மேலும், குடி போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அவர்கள், ராமலிங்கம் வீட்டில் வைத்திருந்த ஆடுகளை திருட முயன்றதும் உறுதிப்படுத்தப்பட்டது. அத்தோடு, 3 பேர் மீதும் செல்வபுரம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட கார்த்திக்கை காவல்துறையினர் கைது செய்து, தப்பியோடி இருவரையும் தேடிவருகின்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...