கோவை கோனியம்மன் கோயில் திருவிழா - பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!

கோவையில் நாளை நடைபெறவுள்ள கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாதுகாப்பு பணிக்காக கோவிலை சுற்றி 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக கோவிலை சுற்றி 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் அமைந்துள்ள பிரபலமான ஆன்மீக தளமாகும். கோனியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தேர்த் திருவிழா பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாகும்.

கோனியம்மன் கோவில் தேர் திருவிழா நாளை நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் கோயம்புத்தூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

கிட்டத்தட்ட 25 ஆயிரம் முதல் 30,000 மேற்பட்ட பக்தர்கள் ஒரே நாளில் ஒரே இடத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பக்தர்களுக்கு பாதுகாப்பு தரும் பொருட்டு கோனியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையொட்டி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் நான்கு துணை ஆணையர்கள், 11 உதவி ஆணையர்கள், 25 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1060 போலீசார் கோனியம்மன் திருக்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அதுமட்டுமின்றி பக்தர்கள் கூட்டத்தில் கைவரிசை காட்டுவோரை பிடிப்பதற்காக போலீசார் மப்டியில் உலா வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோனியம்மன் கோயிலின் நுழைவு வாசலில் மெட்டல் டிடெக்டர்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை பாதுகாக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...