கோவை கோனியம்மன் கோயில் திருவிழா - பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!

கோவையில் நாளை நடைபெறவுள்ள கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாதுகாப்பு பணிக்காக கோவிலை சுற்றி 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக கோவிலை சுற்றி 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் அமைந்துள்ள பிரபலமான ஆன்மீக தளமாகும். கோனியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தேர்த் திருவிழா பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாகும்.

கோனியம்மன் கோவில் தேர் திருவிழா நாளை நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் கோயம்புத்தூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

கிட்டத்தட்ட 25 ஆயிரம் முதல் 30,000 மேற்பட்ட பக்தர்கள் ஒரே நாளில் ஒரே இடத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பக்தர்களுக்கு பாதுகாப்பு தரும் பொருட்டு கோனியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையொட்டி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் நான்கு துணை ஆணையர்கள், 11 உதவி ஆணையர்கள், 25 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1060 போலீசார் கோனியம்மன் திருக்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அதுமட்டுமின்றி பக்தர்கள் கூட்டத்தில் கைவரிசை காட்டுவோரை பிடிப்பதற்காக போலீசார் மப்டியில் உலா வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோனியம்மன் கோயிலின் நுழைவு வாசலில் மெட்டல் டிடெக்டர்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை பாதுகாக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...