தாராபுரம் அருகே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் சமுதாயக்கூடத்தில் பெண் உரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தேசிய சட்டப் பணிகள் ஆணை குழுவின் ஆணைப்படி தேசிய மகளிர் ஆணையம் மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் இந்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



இந்த முகாமிற்கு தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமை ஏற்றார். தாராபுரம் குற்றவியல் நடுவர் பாபு மற்றும் பெண்கள் குழந்தைகள் நல அறக்கட்டளை தலைவர் ரேவதி, தன்னார்வலர் சிவகாமி வழக்கறிஞர் வாரனவாசை ஆகியோர் கலந்து கொண்டனர்.



இம்முகாமில் பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் போன்றோருக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமையில் இருந்து எவ்வாறு விடுபடுவது குறித்து தெரிவிக்கப்பட்டது.

படித்த பெண்கள் சில சட்டங்களையாவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளை மனதளவிலும் உடல் நலவிலும் திடமானவர்களாக உருவாக்க வேண்டும்.

நீதிபதிகள் வட்ட சட்டப் பணிகள் குழு செயல்பாடு விதத்தையும் அதன் பயன்பாட்டையும் கூறினர். முகாமிற்கு வந்தவர்களை ஊராட்சி மன்ற தலைவர் ரேவதிக்குமார் வரவேற்று பேசினார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...