தாராபுரம் அருகே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் சமுதாயக்கூடத்தில் பெண் உரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தேசிய சட்டப் பணிகள் ஆணை குழுவின் ஆணைப்படி தேசிய மகளிர் ஆணையம் மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் இந்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



இந்த முகாமிற்கு தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமை ஏற்றார். தாராபுரம் குற்றவியல் நடுவர் பாபு மற்றும் பெண்கள் குழந்தைகள் நல அறக்கட்டளை தலைவர் ரேவதி, தன்னார்வலர் சிவகாமி வழக்கறிஞர் வாரனவாசை ஆகியோர் கலந்து கொண்டனர்.



இம்முகாமில் பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் போன்றோருக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமையில் இருந்து எவ்வாறு விடுபடுவது குறித்து தெரிவிக்கப்பட்டது.

படித்த பெண்கள் சில சட்டங்களையாவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளை மனதளவிலும் உடல் நலவிலும் திடமானவர்களாக உருவாக்க வேண்டும்.

நீதிபதிகள் வட்ட சட்டப் பணிகள் குழு செயல்பாடு விதத்தையும் அதன் பயன்பாட்டையும் கூறினர். முகாமிற்கு வந்தவர்களை ஊராட்சி மன்ற தலைவர் ரேவதிக்குமார் வரவேற்று பேசினார்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...