தாராபுரம் அருகே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் சமுதாயக்கூடத்தில் பெண் உரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தேசிய சட்டப் பணிகள் ஆணை குழுவின் ஆணைப்படி தேசிய மகளிர் ஆணையம் மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் இந்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



இந்த முகாமிற்கு தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமை ஏற்றார். தாராபுரம் குற்றவியல் நடுவர் பாபு மற்றும் பெண்கள் குழந்தைகள் நல அறக்கட்டளை தலைவர் ரேவதி, தன்னார்வலர் சிவகாமி வழக்கறிஞர் வாரனவாசை ஆகியோர் கலந்து கொண்டனர்.



இம்முகாமில் பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் போன்றோருக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமையில் இருந்து எவ்வாறு விடுபடுவது குறித்து தெரிவிக்கப்பட்டது.

படித்த பெண்கள் சில சட்டங்களையாவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளை மனதளவிலும் உடல் நலவிலும் திடமானவர்களாக உருவாக்க வேண்டும்.

நீதிபதிகள் வட்ட சட்டப் பணிகள் குழு செயல்பாடு விதத்தையும் அதன் பயன்பாட்டையும் கூறினர். முகாமிற்கு வந்தவர்களை ஊராட்சி மன்ற தலைவர் ரேவதிக்குமார் வரவேற்று பேசினார்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...