ரேஷன் அரிசி கடத்திய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

பொள்ளாச்சி அருகே கடந்த 2013ஆம் ஆண்டு ரேசன் அரிசி கடத்திய வழக்கில் கைதான கார்த்தி, நவாஸ் ஆகிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் குமார் என்பவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.


கோவை: ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், இருவருக்கு தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார், 2013 மே 17ல், மீன்கரை ரோடு, காளியப்பகவுண்டன்புதுார் சோதனை சாவடியில், வாகன தணிக்கை செய்தனர். அப்போது, வேனை சோதனையிட்டதில், 19 டன் ரேஷன் அரிசி கேரளாவுக்குக் கடத்தப்படுவது தெரியவந்தது.

இதுதொடர்பாக, பொள்ளாச்சி திருநீலகண்டர் வீதியைச் சேர்ந்த கார்த்தி, 32; நேதாஜி ரோட்டை சேர்ந்த நவாஸ்(35),வஞ்சியாபுரத்தை சேர்ந்த விக்னேஷ்குமார், 39, மற்றும் ஆனந்தகுமார், தேன்மொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது, கோவை குற்றவியல் நீதிமன்றம் 4ல் வழக்கு தொடரப்பட்டு, 9 ஆண்டுகளாக விசாரணை நடந்தது. விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் கார்த்தி, நவாஸ் ஆகியோருக்கு, மூன்றாண்டு சிறை, தலா 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சரவணபாபு தீர்ப்பளித்தார்.

விக்னேஷ்குமார் விடுவிக்கப்பட்டார். ஆனந்தகுமார், தேன்மொழி ஆகியோர் விசாரணை காலத்தில் இறந்து விட்டனர். அரசு தரப்பில் வக்கீல் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...