வேங்கை வயல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்..! - தாராபுரத்தில் தடா பெரியசாமி வலியுறுத்தல்

திமுக அரசு தங்களை திராவிட அரசு, சமூக நீதி அரசு என்று சொல்லிக் கொண்டு வருகிறது. பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் 10,461 கோடி ரூபாயை திமுக அரசு ஏமாற்றி உள்ளதாக பாஜக பட்டியலின பிரிவு மாநில தலைவர் தடா பெரியசாமி குற்றச்சாட்டினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின பிரிவு சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், பட்டியலின அணியின் மாவட்ட தலைவர் சித்தார்த்தன் வரவேற்றார்.



பாஜக மாநில பட்டியலின பிரிவு தலைவர் தடா பெரியசாமி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தடா பெரியசாமி கூறியதாவது:



திமுக அரசனது பட்டியலின சமூகத்தை வஞ்சித்து வருகிறது. பட்டியல் சமூகத்திற்கு மத்திய அரசாங்கம் ஏராளமான நிதியை ஒதுக்கி வருகிறது. மாநில அரசுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் திமுக அரசு செலவு செய்யாமல் மனம்போன போக்கில் செலவு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளது.

22 -23 நிதியாண்டில் மட்டும் 16,442 கோடி அதில் பத்தாயிரத்தி நானூத்தி அறுபத்தாறு கோடி செலவு செய்யாமல் இருக்கிறது. திமுக அரசு தங்களை திராவிட அரசு, சமூக நீதி அரசு என்று சொல்லிக் கொண்டு வருகிறது. பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் 10,461 கோடி ஏமாற்றிக் கொண்டு இருக்கும் அரசு திமுக அரசு.

நேற்றைய தினம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இந்த செய்தியை பத்திரிகையாளர்களிடம் முன் வைத்தார் அதற்கு இதுவரை திமுக அரசின் முதல்வரோ, தாராபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜோ இதுவரை வாய் திறக்கவில்லை.

அந்த அளவிற்கு பட்டியல் சமூகத்தை ஏமாற்றி சமூக மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல் பட்டு வருகிறது. இதேபோன்று 2010 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி இருந்தபோது, பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் செலவு செய்யாமல் அதை எடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்து விட்டார்கள். அந்த அளவிற்கு ஏமாற்றி வருகின்றனர்.

இதை போன்று சமத்துவபுரம் என்று இந்த நிதியை எடுத்து செலவு செய்தார். தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பட்டியலின மக்களை ஏமாற்றுவதை நிறுத்தவில்லை என்றால் திமுக அரசை கண்டித்து எதிர்வரும் ஆறாம் தேதி தமிழக முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறியாமல் வேறொரு விஷயத்தை திசைமாற்றம் செய்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமல் ஏமாற்றி விட்டீர்கள். மாவட்ட ஆட்சியரை கண்டித்து வந்ததாகவும் இதைத் தாண்டி காவல்துறையினர் சிபிசிஐடிக்கு அனுப்பினார்கள். நாங்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டுள்ளோம்.

உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க வேண்டும். குற்றவாளி யார் என்று காவல்துறைக்கும் தெரியும். உண்மை குற்றவாளிகளை மறைக்க பார்க்கிறார்கள். அதற்காகத்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென நாங்கள் கேட்கிறோம்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...