கோவை சிறுமுகை வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை - வனத்துறை விசாரணை!

சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் குழுவினருடன் யானையின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய, உடற்கூறாய்வு பரிசோதனை மேற்கொண்டனர்.


கோவை: கோவை சிறுமுகை அருகே காப்புக்காட்டில் இறந்த நிலையில் ஆண் யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட மோதூர் பெத்திக்குட்டை காப்புகாடு வனப்பகுதிக்குள் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது கருப்பராயன் கோவில் அருகேயுள்ள வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கால்நடை மருத்துவர் குழுவுடன் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து, யானையில் உடலை வன அதிகாரிகளும் கால்நடை மருத்துவர்களும் ஆய்வு செய்தனர்.

இதனிடையே யானையின் உடலில் எந்த காயங்களும் இல்லாததால், யானை எப்படி இறந்தது என்பதை கண்டு பிடிப்பதற்காக இன்று உடற்கூறாய்வு பரிசோதனை நடைபெற்றது. இந்நிலையில், பரிசோதனையின் முடிவில் தான் யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...