எங்கள் பணியை வரன்முறைப்படுத்துங்கள்..! - திருப்பூர் டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ வைரல்

அரசாங்கம் எதுவும் தருவதில்லை. எங்கள் பணியை வரன்முறைப்படுத்தினால் மட்டுமே மதுபாட்டிலுக்கு கூடுதல் தொகை வாங்குவதை நிறுத்த முடியும் என திருப்பூரை சேர்ந்த தற்காலிகம் அடிப்படையில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ வைரல்.



திருப்பூர்: மதுப்பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வாங்குவது குறித்து திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் அண்ணாநகரில் டாஸ்மாக் மதுபானக்கடை எண் 2312 செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த கடையில் பணி புரியும் விற்பனையாளரிடம் மதுபாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவது குறித்து குடிமகன் ஒருவர் கேட்டபோது, கடைக்கு வாகனத்தில் கொண்டு வந்து மதுபான பாட்டில்களை இறக்கி வைக்கும் கூலியாட்களுக்கும், பர்மிட் எழுதுபவர்களுக்கும் நாங்கள் தான் பணம் தருகிறோம்.

அரசாங்கம் எதுவும் தருவதில்லை. எங்கள் பணியை வரன்முறைப் படித்தினால் தான் அரசாங்கத்திலிருந்து தருவார்கள். அதுவரை தற்காலிகமாக பணி புரியம் நாங்கள், இதுபோன்று மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிலிருந்து தான் மேற்கண்ட செலவுகளை சமாளிக்க முடியும் என்று டாஸ்மாக் விற்பனையாளர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...