எங்கள் பணியை வரன்முறைப்படுத்துங்கள்..! - திருப்பூர் டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ வைரல்

அரசாங்கம் எதுவும் தருவதில்லை. எங்கள் பணியை வரன்முறைப்படுத்தினால் மட்டுமே மதுபாட்டிலுக்கு கூடுதல் தொகை வாங்குவதை நிறுத்த முடியும் என திருப்பூரை சேர்ந்த தற்காலிகம் அடிப்படையில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ வைரல்.



திருப்பூர்: மதுப்பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வாங்குவது குறித்து திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் அண்ணாநகரில் டாஸ்மாக் மதுபானக்கடை எண் 2312 செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த கடையில் பணி புரியும் விற்பனையாளரிடம் மதுபாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவது குறித்து குடிமகன் ஒருவர் கேட்டபோது, கடைக்கு வாகனத்தில் கொண்டு வந்து மதுபான பாட்டில்களை இறக்கி வைக்கும் கூலியாட்களுக்கும், பர்மிட் எழுதுபவர்களுக்கும் நாங்கள் தான் பணம் தருகிறோம்.

அரசாங்கம் எதுவும் தருவதில்லை. எங்கள் பணியை வரன்முறைப் படித்தினால் தான் அரசாங்கத்திலிருந்து தருவார்கள். அதுவரை தற்காலிகமாக பணி புரியம் நாங்கள், இதுபோன்று மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிலிருந்து தான் மேற்கண்ட செலவுகளை சமாளிக்க முடியும் என்று டாஸ்மாக் விற்பனையாளர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...