'வால்பாறை வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை நலமுடன் உள்ளது..!' - வனத்துறை அதிகாரிகள் தகவல்!

கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டிருந்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, வால்பாறை அருகேயுள்ள வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், யானை நலமுடன் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தகவல்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை நலமுடன் இருப்பதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டிருந்த மக்னா யானையை வனத்துறையினர், தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், கும்கி யானையின் உதவியுடன், மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.



இந்நிலையில், ரேடியோக்காலர் பொருத்தப்பட்டு, கோவையில் இருந்து லாரியின் மூலம் ஏற்றி வரப்பட்ட மக்னா யானை, வால்பாறை அடுத்த மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மந்திரி மட்டம் அருகே வனப்பகுதியில் இரவு சுமார் 9 மணியளவில் விடுவிக்கப்பட்டது.



விடுவிக்கப்பட்டவுடன், தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீர் அருந்திய மக்னா யானை, பின்பு வனப்பகுதிக்குள் சென்றது.



இதனிடையே, இன்று காலை ஆற்றின் கரையோரத்தில் நின்றிருந்த மக்னா யானை, தண்ணீர் அருந்திவிட்டு நடந்து சென்ற நிலையில், வனத்துறை யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையில், 24 மணி நேரம் லாரியில் யானை நின்று கொண்டு வந்ததால், யானை மிகவும் சோர்வாக காணப்பட்டது என்றும், மயக்க மருந்தின் வீரியம் குறைந்த பின்பு யானை உற்சாகத்துடன் உள்ளதாகவும் யானையை கண்காணித்து வரும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையை கண்காணிக்க வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி மற்றும் டாப்சிலிப் ஆகிய நான்கு வனச்சரகர்கள் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்த கண்காணிப்பு பணியில் கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் ஓய்வுபெற்ற மருத்துவர் மனோகரன் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் வனப்பகுதியில் தங்கியிருந்து யானையை கண்காணித்து வருகின்றனர். தற்போது யானை நலமுடன் இருப்பதாக வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...