கோவையில் 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் - வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது

கோவை துடியலூர் அருகே காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் போதைப் பொருட்களை ஒழிக்க தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் சரவணம்பட்டி- துடியலூர் சாலை ஆறுமுகம் ரைஸ் மில் அருகில் தனிப்படை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையில் வாகன சோதனை நடந்தது.

அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி காவல்துறையினர், சோதனை மேற்கொண்டதில் சந்தேகப்படும்படியாக இரு மூட்டைகள் இருந்தன. காவல்துறையினர் அதனை திறந்து பார்த்தபோது கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காரை ஓட்டி வந்தவர்களை துடியலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.



அதில், அவர்கள் பீகாரை சேர்ந்த சந்தன்குமார்(வயது30) மற்றும் அன்ஹித்குமார்(வயது19) என்பதும், அதில் சந்தன்குமார் காளப்பட்டி பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதும், அங்கு சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்ய எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.



இதனைத் தொடர்ந்து, சுமார் 7 லட்சம் மதிப்பிலான 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...