பிரியாணிக்கு பின் சாதம் கேட்டு தகராறு....ஓட்டல் ஊழியரை தாக்கும் வாடிக்கையாளர் சிசிடிவி காட்சி

கோவை மாவட்டம் சூலூர் அருகே பிரபல ஓட்டலில் பிரியாணிக்கு பின் வெள்ளை சாதம் கேட்டு வாடிக்கையாளரும் ஓட்டல் ஊழியர்களும் மோதிக்கொண்ட சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் நரசிம்ம மில் பகுதியில் தனியார் மெஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சைவம் அசைவம் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர், தனது இரண்டு நண்பர்களுடன் அந்த ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார்.

ஒருவர் மட்டும் சைவ சாப்பாடு ஆர்டர் செய்த நிலையில் மற்ற இருவரும் ஒரு பிரியாணி வகையை வாங்கி பங்கிட்டு சாப்பிட்டுள்ளனர். பிரியாணி சாப்பிட்ட பின் அவர்கள் வெள்ளை சாதம் கொடுக்கும்படி ஓட்டல் ஊழியரிடம் கேட்டுள்ளனர்.



அதற்கு ஓட்டல் ஊழியர்கள் மறுப்பு தெரிவிக்கவே இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது கைகலப்பானது.



அதில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சிவில் இன்ஜினியர் உடன் வந்த மூன்று பேரும் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இரு தரப்பினரும் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, தாங்கள் சமாதானமாக செல்வதாக கூறி இரு தரப்பினரும் புகாரை வாபஸ் பெற்றனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...