ஊட்டி தாவரவியல் பூங்காவில் துலிப் மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் முதல் முறையாக வளர்க்கப்பட்டு, கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள துலிப் மலர் உள்ளிட்ட, 50 வகையான வண்ண மலர்களைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.



நீலகிரி: உதகை தாவர பூங்காவில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள துலிப் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.



நீலகிரி மாவட்டம் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிரசித்தி பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவைக் காண அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம்.



ஆனால் தற்போது குளிர்காலம் என்பதால் பூங்கா மலர்கள் இன்றி பொலிவிழந்து காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் பூங்காவை மட்டுமே சுற்றிப் பார்த்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.



இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க பூங்காவிற்குள் உள்ள பழமையான கண்ணாடி மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகளைப் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.



அதாவது கண்ணாடி மாளிகைக்குள் பனியின் தாக்கம் இருக்காது என்பதாலும், குளிரிலும் பூக்கள் பாதிக்காத வகையில், 50 வகையான மலர் செடிகள் கொண்ட 25 ஆயிரம் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



அதில் வழக்கமான ரகங்களான பெட்டூனியா, காகித பூ, ஐட்ரிஜினியா, பால்சம், பிக்கோனியா, டெய்சி எனப் பல வண்ணங்களில் மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



அதில் ஜம்மு காஷ்மீர் போன்ற பனிப் பிரதேசங்களிலும் மட்டுமே பூக்க கூடிய துலிப் மலர்ச் செடிகள் தாவரவியல் பூங்கா பண்ணையில் முதல் முறையாக பயிரிட்டு வெற்றி கரமாக வளர்க்கப்பட்டு பூக்கள் பூத்துள்ளதையடுத்து 4 வித துலிப் மலர் தொட்டிகளும் இடம் பெற்றுள்ளன.



சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பிங்க் என பூத்துள்ள துலீப் மலர்களைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...