டெல்லியில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் - ஏபிவிபி அமைப்பை தடை செய்யக்கோரி கோவையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பை தடை செய்யக்கோரி கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு அனைத்து முற்போக்கு மாணவர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: டெல்லியில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பை தடை செய்ய கோரி கோவையில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இருதரப்பு மாணவர்கள் தாக்குதலில் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தமிழ் மாணவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார், காரல் மார்க்ஸ் போன்றவர்களின் புகைப்படங்களை சேதப்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும், புகைப்படங்களை சேதப்படுத்தியதற்கும் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், பெரியார், காரல் மார்க்ஸ் போன்றவர்களின் புகைப்படங்களை சேதப்படுத்திய ஏபிவிபி அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி கோவை அரசு கலைக்கல்லூரி வளாகம் முன்பு அனைத்து முற்போக்கு மாணவர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், ஏபிவிபி அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...