டெல்லியில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் - ஏபிவிபி அமைப்பை தடை செய்யக்கோரி கோவையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பை தடை செய்யக்கோரி கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு அனைத்து முற்போக்கு மாணவர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: டெல்லியில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பை தடை செய்ய கோரி கோவையில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இருதரப்பு மாணவர்கள் தாக்குதலில் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தமிழ் மாணவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார், காரல் மார்க்ஸ் போன்றவர்களின் புகைப்படங்களை சேதப்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும், புகைப்படங்களை சேதப்படுத்தியதற்கும் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், பெரியார், காரல் மார்க்ஸ் போன்றவர்களின் புகைப்படங்களை சேதப்படுத்திய ஏபிவிபி அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி கோவை அரசு கலைக்கல்லூரி வளாகம் முன்பு அனைத்து முற்போக்கு மாணவர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், ஏபிவிபி அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...