டெல்லியில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் - ஏபிவிபி அமைப்பை தடை செய்யக்கோரி கோவையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பை தடை செய்யக்கோரி கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு அனைத்து முற்போக்கு மாணவர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: டெல்லியில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பை தடை செய்ய கோரி கோவையில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இருதரப்பு மாணவர்கள் தாக்குதலில் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தமிழ் மாணவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார், காரல் மார்க்ஸ் போன்றவர்களின் புகைப்படங்களை சேதப்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும், புகைப்படங்களை சேதப்படுத்தியதற்கும் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், பெரியார், காரல் மார்க்ஸ் போன்றவர்களின் புகைப்படங்களை சேதப்படுத்திய ஏபிவிபி அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி கோவை அரசு கலைக்கல்லூரி வளாகம் முன்பு அனைத்து முற்போக்கு மாணவர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், ஏபிவிபி அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...