கோவையில் ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா - அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட காவல் ஆணையர்!

கோவை மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கான அடிப்படை பயிற்சி நிறைவு விழாவில், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, காவலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.



கோவை: கோவை மாநகர ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கோவை மாநகர காவல் துறை ஊர்க்காவல் படையிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தேர்வு நடத்தப்பட்டது. அதில் 26 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 33 பேர் தேர்வு பெற்ற நிலையில் அவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதில் அணிவகுப்பு மேற்கொள்வது, கலவரங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது, போராட்ட நேரங்களில் எவ்வாறு செயல்படுவது, பேரிடர் நேரங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



45 நாட்கள் நடைபெற்ற பயிற்சி நிறைவடைந்ததையொட்டி அதன் நிறைவு விழா கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பயிற்சி முடித்த ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு நிகழ்வை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் இந்நிகழ்வில் அவர் பேசியபோது, ஊர்க்காவல் படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அனைவருக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த காவலர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும். ஊர்க்காவல் படையினர் எவ்வாறு செயல்பட வேண்டும், எவ்வாறு சிந்திக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.



இந்நிகழ்வில் கோவை மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 16 ஊர்க்காவல் படையினரின் இசைக்குழுவும் அறிமுகம் செய்யப்பட்டது. ஊர்க்காவல் படை பிரதேச தளபதி தனசேகரன், துணை பிரதேச தளபதி தேன்மொழி ராஜாராம் உட்பட பல்வேறு காவலர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...