கோவையில் ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா - அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட காவல் ஆணையர்!

கோவை மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கான அடிப்படை பயிற்சி நிறைவு விழாவில், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, காவலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.



கோவை: கோவை மாநகர ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கோவை மாநகர காவல் துறை ஊர்க்காவல் படையிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தேர்வு நடத்தப்பட்டது. அதில் 26 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 33 பேர் தேர்வு பெற்ற நிலையில் அவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதில் அணிவகுப்பு மேற்கொள்வது, கலவரங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது, போராட்ட நேரங்களில் எவ்வாறு செயல்படுவது, பேரிடர் நேரங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



45 நாட்கள் நடைபெற்ற பயிற்சி நிறைவடைந்ததையொட்டி அதன் நிறைவு விழா கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பயிற்சி முடித்த ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு நிகழ்வை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் இந்நிகழ்வில் அவர் பேசியபோது, ஊர்க்காவல் படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அனைவருக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த காவலர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும். ஊர்க்காவல் படையினர் எவ்வாறு செயல்பட வேண்டும், எவ்வாறு சிந்திக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.



இந்நிகழ்வில் கோவை மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 16 ஊர்க்காவல் படையினரின் இசைக்குழுவும் அறிமுகம் செய்யப்பட்டது. ஊர்க்காவல் படை பிரதேச தளபதி தனசேகரன், துணை பிரதேச தளபதி தேன்மொழி ராஜாராம் உட்பட பல்வேறு காவலர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...