கோழி கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்..! - கோவை மாநகராட்சியில் சிபிஐ மனு!

கோவை மாநகராட்சியின் 83ஆவது வார்டு பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகில் சிலர் கோழி கழிவுகளை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இன்று காலை மேயர் கல்பனா தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.

மேயரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சியின் 83ஆவது வார்டுக்குட்பட்ட சோமசுந்தரம் ஆலை, காளீஸ்வரா ஆலை பாதையில் உள்ள ரயில்வே பாலம் அருகில் சிலர் கோழி கழிவுகளை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

அந்த பாதை வழியாக நடக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பாதையில் இருபுறமும் கார் மற்றும் லாரிகளை விரிசையாக நிறுத்தி வருவதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த வார்டு பகுதியில் இரவு நேரத்தில் குடிநீர் வழங்குவதால், கண் விழித்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் தண்ணீர் வழங்குவதை தவிர்த்து, பகல்நேரத்தில் தண்ணீர் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் இதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி, மின்விளக்கு, சாலை வசதி என பொதுபிரச்சினைகள் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை மக்கள் மேயரிடம் அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...