டாப்சிலிப் வனப்பகுதி அருகே மீண்டும் கிராமங்களில் நுழைந்த மக்னா யானை - பொதுமக்கள் அச்சம்!

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வன பகுதியில் விடப்பட்ட மக்னா காட்டு யானை, ஊருக்குள் புகுந்ததால், விவசாய நிலம் மற்றும் பொதுமக்களை தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு கும்கி யானைகள் மூலம் விரட்டும்பணி நடந்து வருகிறது.



கோவை: டாப் சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா காட்டு யானை மீண்டும் ஊருக்குள் புகுந்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் மக்னா காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தது.

இந்நிலையில் இந்த மக்னா யானையை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி கோழிகமுத்தி யானைகள் முகாமிலிருந்து கும்கி யானையான சின்னதம்பி மற்றும் வனத்துறை குழுவினர் உதவியுடன் கடந்த 5ஆம் தேதியன்று மயக்க ஊசி செலுத்தி மக்னா யானையை பிடித்தனர்.

பின்னர், பிடிப்பட்ட மக்னா யானையை பொள்ளாச்சி அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதியான டாப்சிலிப் வரகளியார் வனப்பகுதியில் 6ஆம் தேதி விடப்பட்டது.



இந்நிலையில், வனத்துறை அதிகாரிகள் தனி குழு அமைத்து, மக்னா காட்டு யானையை கண்காணித்து வந்த நிலையில், நேற்று இரவு அந்த யானை வனத்தை விட்டு வெளியேறி சேத்துமடை கிராமம் வழியாக நுழைந்து, நல்லூத்துக்குளி, கா.க.புதூர், ஆத்து பொள்ளாச்சி, உள்ளிட கிராமங்களை கடந்து, தற்போது மன்னூர் ராமநாதபுரம் என சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து சென்று கொண்டே இருந்தது.

இதனையடுத்து பொள்ளாச்சி வனச்சரக அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து யானையை பின் தொடர்ந்து சென்று கண்காணித்து வந்த நிலையில், தற்போது சூலக்கல் அருகே உள்ள கோவிந்தன் ஊர் என்ற இடத்தில் யானை ஓய்வெடுத்துள்ளதை வனத்துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர்.



யானை மீண்டும் அப்பகுதியில் இருந்து பயணித்தால் கிராம மக்களுக்கு அல்லது விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாப் ஸ்லிப் கோழிக்கமுத்தியில் இருந்து சின்னத்தம்பி மற்றும் ராஜவர்த்தனன் என இரண்டு கும்கி யானைகள் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநரும், கோவை மண்டல வன பாதுகாவலருமான ராமசுப்ரமணி மற்றும் மாவட்ட வன மருத்துவர் மனோகரன் யானையை வனப்பகுதியில் விரட்டுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

யானை கிராமப்பகுதிகளில் நுழைந்து வீடுகள் மற்றும் விளை நிலங்களை சேதப்படுத்துவதற்குள் அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...