உடுமலையில் விதை, உரம் விற்பனையில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!

திருப்பூர்: உரம் விற்பனையாளர்கள் சட்டத்தின் அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்ற வேண்டும், தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலை எழுதி வைத்துக்கொண்டு விற்பனையில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட வேளாண் இயக்குநர் மாரியப்பன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் சாகுபடிக்கு தேவையான விதை, பூச்சிக்கொல்லி மருந்து விற்பனைக்கு 75-க்கும் மேற்பட்ட தனியார் விற்பனை கடைகள் உள்ளன. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாகவும், உரங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.



இந்நிலையில் தோட்டக்கலை துறை சார்பில் விநியோகிக்கப்பட்ட பப்பாளி விதைகள் போலியானது என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் மூன்று வட்டார விதை மற்றும் விற்பனையாளர்கள் தோட்டக்கலைத்துறை வேளாண்மை துறை விதைசான்று துறையினர், மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் உடுமலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய திருப்பூர் மாவட்ட வேளாண் இயக்குநர் மாரியப்பன், விதை, உரம் விற்பனையாளர்கள் சட்டத்தின் அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்ற வேண்டும், புதியதாக விதைகளை அறிமுகப்படுத்தும் போது தரம் குறித்து பரிசோதனைகளை செய்வது அவசியம் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலை எழுதி வைத்துக்கொண்டு விற்பனையில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

அனைத்து கடைகளிலும் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கடைகளுக்கு, கடை விலை வித்தியாசம் இருக்கக் கூடாது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் குறித்து விழிப்புணர்வு அவசியமாகும்.

எனவே வரும் காலங்களில் இது சார்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மட்டும் விதை மற்றும் உரிமம், உரம் விற்பனைக்கான உரிமம் சான்று வழங்கப்படும். விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது குறித்து சிறப்பு அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு செய்யும் போது, விதிமுறை மீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே விற்பனையாளர்கள், அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றாவிட்டால் பாரபட்சமின்றி உரிமம் ரத்து செய்யப்படும், என்றார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...