தேசிய தாய்மொழி தினம்: கோவையில் மாவட்ட அளவிலான இலக்கியப் போட்டி!

தேசிய தாய்மொழி தினத்தையொட்டி ஒண்டிப்புதூரில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் தலா 2 மாணவர்கள் தேர்வாகி, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் தேசிய தாய்மொழி தினத்தையொட்டி நடைபெற்ற மாவட்ட அளவிலான இலக்கிய போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.



ஒண்டிப்புதூர் அடுத்த எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், நடத்தப்பட்ட பேச்சுபோட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் தலா 30 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



'கல்வியும் கல்லாமையும்' மற்றும் 'குழந்தைத் தொழிலாளி ஒழிப்பு' என்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்ட இப்போட்டி கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பூபதி மேற்பார்வையில் மற்ற மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

இதனிடையே, மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த பேச்சுப்பேட்டியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தினர்.



இதில் தேர்வுக்குழுவின் பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு போட்டியிலிருந்தும் 2 இறுதி போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...