கோவையில் சாலையில் காரை நிறுத்தி விட்டு தூங்கிய குடிமகன் - போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் போக்குவரத்து நிறைந்த சாலையில் காரை நிறுத்திவிட்டு, குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்த தனியார் நிறுவன மேலாளரான ரஞ்சித் என்பவரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை நோக்கி வந்த கொண்டிருந்த கார் ஒன்று மேம்பாலத்திற்கு அருகில் சாலையிலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. வாகனப்போக்குவரத்து அதிகமாக இருக்கக்கூடிய அந்த சாலையில் கார் நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இதைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரின் உள்ளே பார்த்தனர். அப்போது ஒரு நபர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அந்த நபரை நீண்ட நேரமாக எழுப்ப முயற்சி செய்த போதிலும் அவர் எழுந்திருக்காததால், காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.



அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்ப முற்பட்டனர்.



காவல்துறையினரும் பொதுமக்களும் நீண்ட நேரமாக எழுப்பியும் அவர் எழுந்திருக்காததால் கார் கண்ணாடியை உடைத்தனர்.



அப்போது அந்த நபர் அதிக குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.



பின்னர், குடிபோதையில் இருந்த நபரை தட்டி எழுப்பி காரில் இருந்து வெளியேற்றிய காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர்.



இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதையில் இருந்த அந்த நபர் கோவை வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பதும், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது.



மேலும் மன உளைச்சல் காரணமாக காலையிலேயே அதிகளவிலான மதுவை அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி விபத்தை உண்டாக்கிவிட்டு பின்னர் வாகனத்தை ஓட்ட முடியாமல் சாலையிலேயே நிறுத்தி விட்டு உறங்கியதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் ரஞ்சிடம் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...