கோவை டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை - தொழில்நஷ்டம் காரணம் என விசாரணையில் தகவல்

கோவை தொப்பம்பட்டி லட்சுமி நகர் பகுதியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டடத்தால் மனமுடைந்த டிராவல்ஸ் உரிமையாளர் தினேஷ்குமார் தற்கொலை செய்துகொண்டது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை தொப்பம்பட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. தினேஷ்குமார் சொந்தமாக வாகனங்கள் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கொரோனா காரணமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால், தன்னிடம் இருந்த வாகனங்களை தினேஷ்குமார் விற்றுள்ளார். மேலும், தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் அவர் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனைகளால் விரக்தியில் இருந்து வந்த தினேஷ்குமார், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவர் மனைவி அளித்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...